03 அரிய வகை வலம்புரி சங்குகளுடன் மூவரை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
லங்காபடுன கடற்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கந்தளே விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (27) பிற்பகல் சேருநுவர நகரில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை, ரம்புக்கனை மற்றும் பசறை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 36 – 50 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.