Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேங்காய் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

தேங்காய் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த ஆண்டு மே மாதம் வரை 42,000 மெட்ரிக் டன் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகும்.

நாட்டில் நுகர்வுக்கு போதுமான தேங்காய் எண்ணெய் உள்ளதால், தேங்காய் எண்ணெயின் விலையை உயர்த்துவதற்கு எந்த வகையிலும் அனுமதி அளிக்க முடியாது” இவ்வாறு ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles