க.பொ.த சாதாரண தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, பரீட்சை கடமைகளுக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் ஞாயிற்றுக்கிழமை (22) பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை தாம் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குச் சென்று எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.