இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது.
யுனிசெஃப் மற்றும் உலக உணவுத் திட்டம் மூலம் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு 3 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்குவதாக தூதரகம் அறிவித்துள்ளது.
அதில் 1.5 மில்லியன் டொலர் 25 அத்தியாவசிய மருந்துகளுக்காக செலவிடப்படும்.
மீதமுள்ள 1.5 மில்லியன் டொலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.