Sunday, August 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுகாரளிக்க சென்ற பொலிஸ் நிலையத்தில் கைவரிசையை காட்டிய தம்பதி

புகாரளிக்க சென்ற பொலிஸ் நிலையத்தில் கைவரிசையை காட்டிய தம்பதி

குடும்ப தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தம்பதியினர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பணப்பையை திருடிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாதுவ குரே மாவத்தையில் வசிக்கும் கணவன், மனைவி இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவதற்காக வாதுவ பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடுகள் பிரிவிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, இருவரும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் மேசையிலிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பணப்பையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles