2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் 64.33% வீதமானோர் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 269,613 பேரில் 173,444 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் மாணவர்கள் தங்களின் பரீட்சை பெறுபேறுகளை இப்போது பார்வையிடலாம்.