மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட கடலாமை இறைச்சியுடன் இருவர் நேற்று (30) பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து பொதி செய்யப்பட்ட நிலையில் 82 கிலோ கிராம் கடலாமை இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.
மீன்கள் பொதி செய்து கொண்டு செல்லும் போர்வையில் குறித்த கடலாமை இறைச்சி பொதி செய்யப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.