நக்கில்ஸ் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென வனவள பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் ஊடாக பல்வேறு நபர்கள் வனப்பகுதியில் சுற்றுலாக்களை ஒழுங்கு செய்து வருவதாக வனப்பாதுகாப்பு ஆணையாளர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க தெரிவித்தார்.
பயணிகளுக்கான பாதையை தவிர்த்து மாற்று பகுதிகளில் சிலர் பயணிப்பதால், அவர்களின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளால் வனப்பகுதியின் சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.