Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் 27 பேர் காயம்

வாகன விபத்தில் 27 பேர் காயம்

இரத்தினபுரி – பலாங்கொடை பிரதான வீதியில் பெல்மடுல்ல, ரில்ஹேன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

தனியார் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 20 பேர் கெஹாவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழுபேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles