இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜோன் ப்ரான்கோயிஸ் பெக்டெட்(Jean Francois Pactet) நேற்று (26) பிற்பகல் இராஜகிரியவிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
திடீர் சுகவீனம் காரணமாக அவர் தனது 53ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று (26) இரவு நடைபெற்றது.
இதேவேளை, தூதுவரின் மரணம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
அவரது உடல் மீண்டும் பிரான்ஸுக்கு கொண்டு செல்லப்படுமா அல்லது இந்த நாட்டில் இறுதி சடங்குகள் செய்யப்படுமா என்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படும் எனவும் தூதரகம் மேலும் தெரிவித்தது.
2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் அவர் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவராக இருந்து வருகிறார்.