கெபிதிகொல்லேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யகவெவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக பொறுத்தப்பட்ட மின்சார கம்பியில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெபிதிகொல்லேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.