போராட்டங்கள் குறையும் வரை அமைச்சர்களுக்கு ஒரு பின் வரிசை வாகனத்தை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்றில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.
எந்தவொரு அமைச்சருக்கும் முன் வரிசை வாகனங்கள் அல்லது முன் வரிசை பொலிஸ் வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது.
அத்துடன், நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு கண்ட பின்னர், பின் வரிசை வாகனங்களையும் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.