அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளையுடன் (20) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 2 ஆம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி திறக்கப்படும்.
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால் நாளை முதல் முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படுகின்றது.