போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சங்கானை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து 25 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.
கைதான இளைஞனை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.