Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்வணிகம்வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு

வட்டி விகிதம் அதிகரிக்கும் வாய்ப்பு

இலங்கை வங்கிகளின் வட்டி விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான தீர்மானம் இன்று மத்திய வங்கியின் ஆளுநரால் அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வை ஆரம்பிக்கும் வகையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நந்தலால் வீரசிங்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி, முதல் தடவையாக கூடியது.

இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் முறையே 700 அடிப்படை புள்ளிகளாக 13.50 சதவீதம் மற்றும் 14.50 சதவீதமாக அதிகரிக்க தீர்மனிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles