Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த நால்வர் கைது

சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த நால்வர் கைது

வடமராட்சி மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த 4 பேர் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத தொழில் முறைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றனர்

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அதிகாலை மாமுனை கடற்பகுதியில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது

கைது செய்யப்பட்ட நால்வரும் கடற்படை முகாம் அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles