சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாரிகளிடம் கையளித்தார்.
இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி உச்ச நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டது.
அதற்கமைய, அரசிடம் இருந்து பெற்ற வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துகளையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்படுகிறது.
எனினும், டயனா கமகேவுக்கு வழங்கப்பட்ட அரசின் உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது