தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தோட்ட கம்பனிகள் சட்ட நடவடிக்கை எடுத்தால் அதற்கு முகம் கொடுக்கத் தயார் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மேலும், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, தோட்டக் கம்பனிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன .
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (13) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைக் குறிப்பிட்டார்.