Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

கொட்டுகொட , ரத்தொலுகம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக ரத்தொலுகம பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்தொலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொட்டுகொட , ரத்தொலுகம பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலிருந்த குளவி கூடு கலைந்ததில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்த தந்தையும் இரண்டு பிள்ளைகளும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Keep exploring...

Related Articles