தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களில் 75மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியதையடுத்தே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.