Friday, March 14, 2025
27.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக மீன் பிடித்த 11 பேர் கைது

சட்டவிரோதமாக மீன் பிடித்த 11 பேர் கைது

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளைகளை சேர்ந்த கடற்படையினர் நேற்று (08) கிளிநொச்சி, குடாரப்பு பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு படகுகளில் சட்டவிரோதமாக மீன் பிடித்த 06 மீனவர்களை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வெற்றிலக்கேணி மற்றும் சாலே கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 05 மீனவர்கள், இரண்டு படகுகள் மற்றும் பிடிபட்ட மீன்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் சிலாபம் பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 21 – 47 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களையும் உபகரணங்களையும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் யாப்பண கடற்றொழில் மற்றும் நீரியல் வள அலுவலகத்தில் ஒப்படைக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles