Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது 

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது 

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆக்கரத்தன்ன பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலுத்கெதர, பெல்காத்தன்ன மற்றும் பல்லேகம பதியத்தலாவ பகுதியை சேர்ந்த 32, 44 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் வழக்கு தொடரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles