எரிபொருள் பிரச்சினைக்கு மத்தியில், செலவினங்களைக் குறைப்பதற்காக, அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய, வீடுகளில் இருந்து கடமையாற்றும் ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும் என அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களைப் பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துமாறு சில தரப்பினர் யோசனை முன்வைப்பார்களாயின், சம்பளத்தைக் குறைப்பதற்கும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என அந்த அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
எரிபொருள் உள்ளிட்ட வளங்களின் பற்றாக்குறையால், அரச செலவினங்களைக் குறைப்பதைக் கருத்திற்கொண்டு, அரச ஊழியர்களை அலுவலகத்திற்கு சேவைக்கு அழைப்பதை வரையறைக்கு உட்படுத்துமாறு அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.