கோட்டாகோகம போராட்டம் மீது மே 9ஆம் திகதி SLPP குண்டர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
அலரிமாளிகைக்கு வந்த SLPP ஆதரவாளர்கள், காலிமுகத்திடல் வரை சென்று தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டாம் என பொலிசாருக்கு உத்தரவிட்டவர்கள் யார் என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன நாடாளுமன்றில் தெரியப்படுத்தினார்.
SLPP ஆதரவாளர்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டாம் என பொலிஸ் மா அதிபரும், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமே உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால் ஜனாதிபதியே உடனே அந்த தாக்குதல்தாரிகளை தடுத்து நிறுத்துமாறு உத்தரவிட்டார் என ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.