முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் நிலான் ஜயதிலக்க எம்.பி ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
காலி முகத்திடலில் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கடந்த 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.