Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுல்லைத்தீவுக்கு சென்ற சவப்பெட்டிகளை மடக்கி பிடித்த பொலிஸார்

முல்லைத்தீவுக்கு சென்ற சவப்பெட்டிகளை மடக்கி பிடித்த பொலிஸார்

ஆபத்தான முறையில் சவப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற லொறியை பண்டாரகம பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

பண்டாரகம நகரில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது பாணந்துறையில் இருந்து வந்த லொறியை பண்டாரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்ட போது அங்கு 50 சவப்பெட்டிகள், ஒன்றின் மேல் ஒன்றாக ஏற்றப்பட்டிருந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

பண்டாரகம நகரின் வீதி சமிக்ஞைகளை தொடும் அளவிற்கு குறித்த சவப்பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த லொறியின் சாரதியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​குறித்த சவப்பெட்டிகளை பாணந்துறை, அலுபுமுல்ல பகுதியில் இருந்து முல்லைத்தீவுக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

சவப்பெட்டிகளை ஆபத்தான முறையில் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த லொறி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles