Monday, April 21, 2025
32 C
Colombo
செய்திகள்விளையாட்டுஒலிம்பிக் கனவை இழக்கும் இலங்கை வீரர்கள்?

ஒலிம்பிக் கனவை இழக்கும் இலங்கை வீரர்கள்?

இந்த வாரம் பஹாமாஸில் நடைபெறவுள்ள உலக அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை ஆடவர் அணிக்கான விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க பஹமாஸ் நோக்கி புறப்படவிருந்த இலங்கை ஆடவர் அணி இந்த சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சாதனை படைத்த அருண தர்ஷன மற்றும் காலிங்க குமார உட்பட 4 பேர் கொண்ட அணி 4×400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் பங்கேற்கவிருந்தது.

எவ்வாறாயினும், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா வழங்குவதற்கான நேர்காணல்களுக்கான திகதிகளை மே மாத இறுதி வரை கொடுக்காததால், பஹாமாஸில் நடைபெறும் உலக தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விசா பிரச்சினைகள் காரணமாக பஹாமாஸுக்கு செல்ல முடியாது என இலங்கையின் தடகள மற்றும் கள நிர்வாகக் குழு நேற்று இலங்கை ஆடவர் அணியின் உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.

போட்டிக்கான அழைப்பிதழ் கிடைத்த உடன், விசா கோரி விண்ணப்பித்த போதிலும், அமெரிக்க தூதரகம் மே மாத இறுதியிலேயே நேர்காணலுக்கான நியமனங்களை வழங்கியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் விளையாட்டு அமைச்சர் தலையிட்டாலும், தூதரகம் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை என இலங்கையின் தடகள மற்றும் கள நிர்வாகக் குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles