இரத்தோட்டை, வெல்காலயாய பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் வீட்டில் இருந்த சகோதரனும் சகோதரியும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (29) மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெல்காலயாய – இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.