வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவரை கொனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அதன்படி நேற்று (25) விசேட அதிரடிப்படையினர் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அமன்தொலுவ வீதியில் மாத்தறை அரிசி கடைக்கு அருகில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டனர்.
வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 600 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கட்டுநாயக்க, தல்கஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.