ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள பல வீதிகள் இன்று (24) காலை 9:45 மணி முதல் 11 மணி வரை மூடப்படவுள்ளன.
அத்தோடு கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை இன்று (24) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மற்றும் இரவு 9:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.