Sunday, May 4, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு வாங்க வந்த வெளிநாட்டவரை மிரட்டிய நபர் கைது

உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை மிரட்டிய நபர் கைது

உணவு வாங்க வந்த வெளிநாட்டவர் ஒருவர், விலையை கேட்டு வாங்க மறுத்ததையடுத்து குறித்த உணவகத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபர் அவரை மிரட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரை நேற்று (16) கைது செய்துள்ளனர்.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு அளுத்கடை பகுதியில் வீதி உணவு என்ற பெயரில் உணவு விற்பனை செய்யப்படும் இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (17) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles