புஸ்ஸல்லாவ, ஹெல்பொட பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் நேற்று (14) பிற்பகல் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வேனில் பயணித்த இரண்டு வயது குழந்தையும், 70 வயது தாத்தாவும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.