Tuesday, October 21, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅன்னதானம் உட்கொண்ட 120 பேர் வைத்தியசாலையில்

அன்னதானம் உட்கொண்ட 120 பேர் வைத்தியசாலையில்

நல்லதண்ணி – வாழமலை பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 120 பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலயமொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்டமையினாலேயே ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளங்கள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன், பலர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles