இந்திய கடன் திட்டத்தின் கீழ், பெரும்போகத்திற்காக 65,000 மெட்ரிக் டன் யூரியா பசளையை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடஇ இந்திய உரத் திணைக்களத்தின் செயலாளர் ராஜேஷ் குமார் சதுர்வேதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
யூரியா உரத்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளதுடன், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த உரத்தை வழங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.