Wednesday, May 15, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2,971 மில்லியன் ரூபா வருமானம்

தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2,971 மில்லியன் ரூபா வருமானம்

2024 பெப்ரவரி மாதம் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2971 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் மாதாந்த அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள ஏற்றுமதி அறிக்கையின் பிரகாரம், பெப்ரவரி மாதத்தில் 6739 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் இந்தத் தொகை ஈட்டப்பட்டுள்ளது.

2023 பெப்ரவரி மாதம் 4366 மெற்றிக் தொன் தேங்காய்ப்பால் ஏற்றுமதி செய்யப்பட்டு 2401 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை கூறுகிறது.

கடந்த ஆண்டு கடும் வறட்சியை தொடர்ந்து பெய்த மழையால், தென்னை உற்பத்தியும் அதிகரித்தது.

மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது

வீடொன்றில் இருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சில தினங்களுக்கு...

Keep exploring...

Related Articles