Tuesday, April 21, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொலையில் முடிந்த பல நாள் பகை

கொலையில் முடிந்த பல நாள் பகை

லுணுகம்வெஹர பகுதியில் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை இன்று (28) அதிகாலை 01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

‘இப்பா’ என்றழைக்கப்படும் கெலும் துஷார (32) என்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் நீண்டகாலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles