Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுத்துவாவின் வீட்டின் மீது பெய்த தோட்டா மழை

முத்துவாவின் வீட்டின் மீது பெய்த தோட்டா மழை

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மனோஜ் முத்து குமாரன எனப்படும் ‘முத்துவா’ என்பவரின் வீட்டின் மீது இன்று (27) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Keep exploring...

Related Articles