சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்திருந்த குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றில் மூன்று நாட்கள் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும், எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.