Saturday, March 14, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉத்தரவை மீறி சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

உத்தரவை மீறி சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாகவே ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை நேற்று (14) மாலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது மாங்குளம் வீதி ஊடாக ஒட்டுசுட்டான் நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை மறித்தபோது அது நிக்காமல் பயணித்துள்ளது.

புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தின் மீது கற்சிலைமடு பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles