காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் மஹிந்தவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரி போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
சோசலிச இளைஞர் ஒன்றியம் இன்று (16) கொழும்பில் இந்த போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போராட்டம் இன்று (16) பிற்பகல் 3.00க்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.