Friday, March 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி

நீரில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி

உயிலங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருக்கேதீஸ்வரம் – பாலாவி குளத்தில் நேற்றிரவு (08) நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

வவுனியா – பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிலங்குளம – திருக்கேதீஸ்வரம் கோவிலில் இடம்பெற்ற திருவிழாவை பார்ப்பதற்காக சென்ற குறித்த சிறுவன் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிலங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles