நீண்ட வார இறுதி நாட்களை கருத்திற் கொண்டு மலையாகம் மற்றும் வடக்கு ரயில் சேவைகளில் விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் 10ஆம் திகதி வரை அனுராதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை வரை காலை 6.00 மணிக்கு, மேலும் மாலை 4.30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரை சேவையில் ஈடுபடவுள்ளது.
● மார்ச் 8 – காலை 7.30 கொழும்பு கோட்டை – பதுளை
● மார்ச் 10 – காலை 7.45 பதுளை – கொழும்பு கோட்டை
● மார்ச் 7, 8 மற்றும் 10 – இரவு 7.30 கொழும்பு கோட்டை – பதுளை
● மார்ச் 7, 8 மற்றும் 10 – மாலை 5.20 பதுளை – கொழும்பு கோட்டை