Tuesday, April 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் இவர்களை ஒரே குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என அறிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles