Tuesday, December 23, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயானை தந்தத்துடன் ஒருவர் கைது

யானை தந்தத்துடன் ஒருவர் கைது

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் 4 அடி நீளம் கொண்ட யானையின் தந்தத்தை கோடரியால் வெட்டி மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் யானைத் தந்தத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பலாந்தோட்டை மாமடல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சியம்பலாண்டுவ விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டியாகல வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles