Thursday, October 30, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாருக்கு நிதியுதவி

பொலிஸாருக்கு நிதியுதவி

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் சட்ட உதவி நிதியத்தில் இருந்து நிதியுதவி வழங்குவதற்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அனுமதியளித்துள்ளார்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.

பொலிஸார் தங்கள் கடமைகளைச் செய்யும் போது எதிர்க்கொள்ளும் சட்டச் சிக்கல்களுக்காக தனிப்பட்ட சட்ட உதவியைப் பெற இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவை யோசனை பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதுடன், இதற்கு முன்னர் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles