அனுராதபுரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை முல்லைத்தீவு முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்வெலிசேய விகாரைக்கு முன்பாக உள்ள வாகன தரிப்பிடத்தில் நேற்று (29) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
8 இலட்ச ரூபாவுக்கு மேல் பெறுமதியான 4 கிலோ 250 கிராம் கேரள கஞ்சாவை அங்கு விற்பனை செய்ய வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்பிட்டி – அனவாசல பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.