2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின்’ இரண்டாம் நாள் இன்றாகும்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று ஆரம்பமானது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தினால், யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
அத்துடன், வட மாகாணத்தின் ஏனைய சில பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.