Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதம்புள்ளையில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

தம்புள்ளையில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

தம்புள்ளை பகுதியிலுள்ள வீடொன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தம்புள்ளை – வேவலவௌ பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (27) இரவு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்ட போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் மேலதிக விசாரணையில், குறித்த நபர் தனது மனைவியைப் பிரிந்து தனது தாயுடன் வீட்டில் வசித்து வந்தமை தெரியவந்துள்ளது.

Keep exploring...

Related Articles