Sunday, March 15, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளுத்துறை உணவகங்களில் திடீர் சோதனை

களுத்துறை உணவகங்களில் திடீர் சோதனை

களுத்துறை தேசிய சுகாதார நிறுவகம் மற்றும் பேருவளை வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்று (27) இரவு களுத்துறை நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

களுத்துறை நகரில் உள்ள உணவகங்கள் சுகாதார விதிகளை மீறி வியாபாரம் செய்வதாக களுத்துறை தேசிய சுகாதார நிறுவகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உணவகங்களில் உணவை சரியாக பொதியிடாமை, குளிர்சாதன பெட்டிகளில் உணவுகளை சரியாக வைக்காமை, உணவு உற்பத்திக்கு தேவையான பொருட்களை சரியாக பொதியிடாமை, உணவின் மீது முறையான காலாவதி திகதிகள் ஒட்டப்படாமை ஆகிய குற்றங்களுக்காக சுமார் 10 உணவகங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தரமற்ற உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், உணவகங்களை முறையாக நடத்தாத கடை உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles