நாடளாவிய ரீதியில் தற்போது கடும் வெப்பம் நிலவுவதால் தினசரி மின்சார தேவை அதிகரித்துள்ளது.
நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் நீர் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மின் உற்பத்தி தற்போது 30% முதல் 35% வரை உள்ளது.
நாளாந்த மின் தேவை 47 கிகாவோட் மணிநேரமாக அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.